பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் வி.சி.க. துணை நிற்கும் - திருமாவளவன்

பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் வி.சி.க. துணை நிற்கும் - திருமாவளவன்

நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 கலை விழாவின் இறுதி நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக செய்தி தொடர்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், திரைப்பட இயக்குனர்கள் பா. ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன், நடிகர் ஜான் விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற மற்றும் மக்களிசை கலைஞர்களுக்கு, மக்களிசை மாமணி எனும் சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர், மேலும் அவர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய திருமாவளவன், எவராலும் கவனிக்கப்படாத கலைஞர்களை கவனித்து எங்கோ ஒரு மூலையில் இருக்கிற கலைஞர்களை அடையாளப்படுத்தி, தாங்கள் உயர்ந்தவர்கள் என கூறி கொள்பவர்கள் பாடுகிற இந்த மேடையில் மக்களிசை கலைஞர்களை அழைத்து வந்து மரியாதை செய்துள்ளதை நினைத்து பெருமைப்படுவதாக குறிப்பிட்டார்.

பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.