அமைச்சர் உதயநிதி மீது மான நஷ்ட வழக்கு போட்ட இபிஎஸ் ..!

அமைச்சர் உதயநிதி மீது  மான நஷ்ட வழக்கு  போட்ட  இபிஎஸ் ..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிக்கையில், தன்னை விமர்சித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு, 

மேலும் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பதாகவும், தன்னை  பற்றி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடைவிதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதோடு, தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக ஒரு கோடியே 10 லட்சம் இழப்பீடு கேட்டு எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையும்  படிக்க   | "ராகுல் காந்தி ஏன் சனாதனம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை?" சீமான் கேள்வி!!