நிலக்கரி சுரங்கத்திற்கு விலக்கு...நன்றி தெரிவித்து அண்ணாமலை ட்வீட்!
தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்த பிரதமர் மற்றும் மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்த கோரிக்கை மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த நிலக்கரி சுரங்கங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : ”தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை, சென்னையை மிகவும் நேசிக்கிறேன்” - பிரதமர் மோடி பேச்சு!
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில், மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியின் அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடன் என்றென்றும் துணை நிற்பவர் பிரதமர் மோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு @JoshiPralhad அவர்கள் நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. (1/2)#Vanakkam_Modi @Murugan_MoS @CTRavi_BJP @VanathiBJP https://t.co/lUtyc4qRzd
— K.Annamalai (@annamalai_k) April 8, 2023