முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்- தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

ஜோலார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் வீட்டின் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டின் முன்பு  அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்-  தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள்  வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஏலகிரி உள்ளிட்ட 28 இடங்களில் தமிழக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் ஓட்டல்களில் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டின் முன்பு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தொண்டர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீரமணியின் வீட்டின் உள்ளே அனுமதிக்குமாறு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.