” ரேசன் கடையில் விற்பதற்கு பதில், தெருத் தெருவாக” ..! முதலமைச்சரை சாடிய செல்லூர் ராஜூ...!

” ரேசன் கடையில் விற்பதற்கு பதில், தெருத் தெருவாக” ..!  முதலமைச்சரை சாடிய  செல்லூர் ராஜூ...!

தக்காளி, காய்கறிகளை ரேசன் கடையில் விற்பதற்கு பதில், தெருத் தெருவாக தள்ளுவண்டியில் வைத்து விற்கலாம் என்ற அடிப்படை கூட முதலமைச்சருக்கு தெரியாதா என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். 

அ.தி.மு.க வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க அமைப்புச்செயலாளர் தளவாய்சுந்தரம், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ, அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன்,பரமசிவம் (முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது பேசுகையில்:- 

” ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை இல்லை எனவும், தக்காளி விலையை உயர விட்டிருக்ககூடாது என்றும், கூறீனார். தொடர்ந்து, “ தக்காளி, காய்கறி எல்லாம் ரேசன் கடையில் குடுக்கிறதுக்கு பதில் நடமாடும் தள்ளுவண்டியில் வைத்து தெரு தெருவாக விற்கலாம். அப்போது தான் மக்களுக்கு எளிதாக கிடைக்கும். இந்த அடிப்படை அறிவு கூட முதல்வருக்கு இல்லை”. என்று சாடினார்.

அரசாங்கம் விற்கும் மதுபாட்டிலில் 10 ரூபாய் அதிகம் வாங்கலாம் என்று கண்டிபிடித்தது திமுக. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வது எல்லாம் சும்மா. எனவும் தலையில் இருக்கும் வரை தான் முடி, கீழே விழுந்து விட்டால் மயிர். எங்கள் கட்சியில் இருந்து வெளியே போன ஓ.பி.எஸ்., தினகரன் போன்றவர்கள் மயிருக்கு சமம்.  அவர்கள் இருந்தவரை முடி போல் மலர் வைத்து அலங்காரம் செய்தோம்”,  என்றும் கூறினார். 

இதையும் படிக்க   |  ”ஓபிஎஸ்-ஐ பாஜக ஒதுக்கவில்லை” - அண்ணாமலை..!