மழை பாதிப்பு சீராகும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில்  மழை பாதிப்பு சீராகும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு  வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மழை பாதிப்பு சீராகும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை போரூர் உள்ளிட்ட இடங்களில்  செயல்படும் அம்மா உணவகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு  செய்தார்.இதை தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,சென்னையில்  மழை பாதிப்பு சீராகும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு  வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்  மற்றும் மழை நீர் வடிகால் வாரிய திட்டத்தில்  சொல்ல முடியாத அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், ஊழலில்  ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.