மனைவியுடன் அடிக்கடித் தகராறு... ஊர்க்காவல்படை வீரர் தற்கொலை...

குடும்பத்தகராறு காரணமாக  ஊர்க்காவல் படையை சேர்ந்த நடராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியுடன் அடிக்கடித் தகராறு... ஊர்க்காவல்படை வீரர் தற்கொலை...

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ் (28 ) இவர் திருவள்ளூர் பகுதியில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோதி(20) என்பவருடன் திருமணம் நடைபெற்று அனுசியா என்ற 3 வயதில் கை குழந்தை உள்ளது.

நடராஜரும் அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் நடராஜ் இன்றைய தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவருடைய உடலை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்,
இந்த சம்பவம் தொடர்பாக மப்பேடு  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.