5 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம்

நீலகிரி, கோவை  மாவட்டங்களில், இன்று முதல் 5 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

5 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம்

நீலகிரி, கோவை  மாவட்டங்களில், இன்று முதல் 5 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடிமின்னலுடன் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கே வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாளை மற்றும் மறுநாள் நீலகிரி, கோவை, சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில்  கனமழையும், ஏனைய மாவட்டங் கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வருகிற 12 மற்றும் 13 தேதிகளில் பரவலாக இடிமின்னலுடன் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப் பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.