துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை!

துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், 2023-2024 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிக்க : ராகுல் வழக்கு : குஜராத் அரசு 10 நாட்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !

அதேபோல், கலைஞர் நூற்றாண்டு விழாவை கல்லூரியில் கொண்டாடுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.  

முன்னதாக, தேசிய கல்விக்கொள்கை குறித்து தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றைய தினம் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், இன்றைய தினம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர்
பொன்முடி ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.