முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை...  பாதுகாப்பு பணியில் 8,500 போலீசார்...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை...  பாதுகாப்பு பணியில் 8,500 போலீசார்...

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வருகிற 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்காக, கூடுதல் காவல்துறை தலைவர் தாமரைக்கண்ணன் தலைமையில் இராமநாதபுரம் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், 8 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் கூறினார். பொதுமக்கள் யாரும், பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.