போராட்டக்காரர்கள் கைது! போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!

வத்திராயிருப்பில் NIA-வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

போராட்டக்காரர்கள் கைது! போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!

தமிழ்நாடு, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் NIA அதிகாரிகள் நள்ளிரவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் இல்லத்தில் சோதனை செய்து நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க | சுங்கச்சாவடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம்!

இதனை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீட்டில் சோதனை செய்த NIA-வை கண்டித்து 30 க்கும் மேற்பட்டோர் அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் சேக் முகமது தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | கல்லூரி தொடங்க எனது நிலத்தை தருகிறேன் – முன்னாள் அமைச்சர்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாத நிலையில் போராட்டக்காரர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். கைது செய்ய முயன்ற போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.