திருச்சியில் மணல் கடத்தல்... இடையூறாக இருந்தவரின் வீடு சூறை...

திருச்சியில் மணல் கடத்தலுக்கு இடையூறாக இருந்தவரின் வீட்டினை சூறையாடியுள்ளனர். 

திருச்சியில் மணல் கடத்தல்... இடையூறாக இருந்தவரின் வீடு சூறை...

திருச்சியில் மணல் கடத்தலுக்கு இடையூறாக இருந்தவரின் வீட்டினை 30க்கு மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் வந்து சூறையாடியுள்ளனர். 

எசனைக்கோரை கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் மற்றும் ராமஜெயம் ஆகியோர் தலைமையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடப்படுவது குறித்து சிவானந்தம் என்பவர் அடிக்கடி சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவானந்தத்தை தாக்கி அவரை கடத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர் அவர்களிடம் இருந்து தப்பி வீடு திரும்பவே, அந்த கும்பல் இருசக்கர வாகனங்களில் கட்டை, இரும்பு ராடுகளுடன் சிவனந்தம் வீட்டிற்கு வந்து வீட்டை சூறையாடியுள்ளனர். அவர்களை அப்பகுதி கிராம மக்கள் விரட்டியடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இரு கிராமங்களுக்கு இடையே மோதலை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.