ஓசூர் பிரித்தியங்கரா கோவிலில் மிளகாய் வற்றல் பூஜை!!

ஓசூர் பிரித்தியங்கரா கோவிலில் மிளகாய் வற்றல் பூஜை!!

ஓசூர் ஸ்ரீ பிரித்தியங்கரா திருக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை. மிளகாய் வத்தல் யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மோரணப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா திருக்கோவிலில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அம்மனுக்கு உகந்ததான ஆடி மாத பௌர்ணமி பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றுள்ளன.

பின்னர், இரவு, யாக சாலையில் மிளகாய் வத்தல் சமர்ப்பிக்கும் யாக பூஜையும் வெகு விமர்சியாக நடைபெற்றுள்ளது. இதில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருஷ்டி கழிக்கும் விதமாக மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் சமர்ப்பித்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டுள்ளனர்.

இதையும் படிக்க || மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கமாக மாறும் ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹால்!!