பசங்களா தேவையில்லாம வெளியே சுத்தாதிங்க- காவல் ஆணையர் எச்சரிக்கை

ஊரடங்கை மீறி அத்துமீறலில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை பாயும் என சென்னை  காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

பசங்களா தேவையில்லாம வெளியே சுத்தாதிங்க-  காவல் ஆணையர் எச்சரிக்கை
ஊரடங்கை மீறி அத்துமீறலில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை பாயும் என சென்னை  காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
 
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி , காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றனர். 
 
கூட்டத்திற்கு  பிறகு செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால்,. காவல்துறையினருக்கு பொதுமக்கள் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். .ஊரடங்கில்  அத்துமீறுலில் ஈடுபடுபவர்களின்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையர் எச்சரித்தார்.. 
 

 
இதன் பிறகு  பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என  கேட்டு கொண்டார். சலூன் கடை திறப்பு உள்ளிட்டவை தொடர்பாக வருவாய் துறையினரிடம்  ஆலோசனை நடத்தி வருவதாகவும் ககன்தீப் சிங் கூறினார்.