முதலமைச்சருக்கு எதிராக பேசினால் வழக்கு போடுராங்க...ஜெயக்குமார் ....!!

தமிழகத்தை மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை சபரீசன் தான் ஆட்சி செய்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு எதிராக பேசினால் வழக்கு போடுராங்க...ஜெயக்குமார்  ....!!

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாங்காடு பேரூராட்சியில் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,  

அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லம் நினைவிடம் ஆக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு நினைவிடம் ஆக்கப்பட்டு திறக்கப்பட்டது உயர்நீதிமன்றம் அந்த சட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஒப்படைத்திருக்கிறார்கள் மேல் முறையீடு சட்ட வல்லுனருடன் கலந்து ஆலோசித்து மேல் முறையீடு செய்யப்படும் என்றார். 

எதிர் கட்சியாக திமுக இருந்தபோது பேசினார்கள். தற்போது ஆட்சிக்கு எதிராகவும், மு.க. ஸ்டாலினுக்கு எதிராக பேசினால் வழக்கு போடுகிறார்கள் என கூறிய அவர், ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை சபரீசன் தான் ஆட்சி செய்கிறார் என கூறினார்.

மேலும் கருத்து சுதந்தரத்திற்கு எதிரான அரசு இந்த அரசு என்றும் திமுக ஆட்சியில் புதிய திட்டம் ஒன்றும் இல்லை. இப்போது திறக்கப்படும் கட்டடங்கள், பாலங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெரும் என தெரிவித்தார்.