தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றியது இந்த பேனா தான் - முதலமைச்சர்!

தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றியது இந்த பேனா தான் - முதலமைச்சர்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ, அப்போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்ததாக கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


சென்னை கொரட்டூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி அவர்களது மகனின் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர், வள்ளுவர் கோட்டம், டைட்டில் பார்க்கை உருவாக்கிய, குடிசைகளை அடுக்குமாடிக் குடியிருப்புகளாக்கிய, தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றிய பேனா, கலைஞரின் பேனா என கூறினார்.

இதையும் படிக்க : இனி ஃபுட்போர்ட் அடிக்கும் மாணவர்கள் மீது புகார்...போக்குவரத்துத்துறையின் அதிரடி அறிவிப்பு...!

சேதுசமுத்திரத் திட்டம் தொடர்பாக பிரதமர் வாய்திறக்க மறுப்பதாகவும், கருப்பு பணத்தை மீட்டு மக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று எனவும் அவர் கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு எய்ம்ஸ் கட்டுமானத்திற்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.