"அரிசி உணவில் ஆபத்து உள்ளது" எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு!

"அரிசி உணவில் ஆபத்து உள்ளது" எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு!

"அரிசி உணவில் எவ்வளவு சுவையாக உள்ளதோ அவ்வளவு ஆபத்தும் உள்ளது" என வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. சர்வதேச சிறுதானிய ஆண்டிற்கான மையப்பயிராக தமிழ்நாட்டில் கேழ்வரகை தேர்வு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கேழ்வரகு அதிகமாக பயிரிடுவதால் மத்திய அரசினால் தருமபுரி மாவட்டம் சிறுதானிய மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் இரண்டு கிலோ ராகி வழங்குவதாக தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்புகளை வெளியிடப்பட்டது.

அதனை நிறைவேற்றும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ராகி பயிரிடும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக ராகி கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள 4,67,505 குடும்ப அட்டைதாரர்களில் ஏ.ஏ.ஒய், பி.எச்.எச் ஆகிய 2,96,872 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் மாதம் இரண்டு கிலோ கேழ்வரகு வழங்குவதாக திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதனடிப்படையில் தமிழகத்தில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இத்திட்டம் துவக்கி வைக்கபட்டது. அதனையடுத்து இன்று தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக 2 கிலோ கேழ்வரகு வழங்கும் நிகழ்சியும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், தருமபுரி மாவட்டத்தில் இதுவரை குடும்ப அட்டைதாரர்கள் 20 கிலோ அரசியை இலவசமாக நியாய விலை கடைகளில் பெற்று வந்தநிலையில் இன்று முதல் 18 கிலோ அரிசியுடன் 2 கிலோ கேழ்வரகை பெற்றுகொள்ளலாம் என்று கூறிய அவர், அரிசி உணவுகள் சுவையாக இருப்பதால் அதிகம் பேர் அரிசி உணவையே விறும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அரிசி உணவில் எவ்வளவு சுவையாக உள்ளதோ அவ்வளவு ஆபத்தும் உள்ளது. அதனால், ஆபத்துள்ள உணவை தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை தரும் சிறுதானிய உணவுகளை நாம் அதிகம் சாப்பிட வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக பொது மக்கள் அறியும் வண்ணம் சிறுதானிய விதைகள், சிறுதானிய உணவு வகைகளின் கூட்டுறவு துறை சார்பில் அமைக்கபட்ட கண்காட்சியினை பார்வையிட்டார். இந்நிகழ்சியில் உணவு பொருள் ஆணையாளர் ராஜாராம், நிர்வாக இயக்குனர் பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸஸ்வரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!