மழையில் மூழ்கிய 1000 ஏக்கர் சம்பா பயிர்கள்... நாகையில் விவசாயிகள் வேதனை...
நாகை அருகே கன மழையால் 1000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கன மழையால், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடை, செட்டிச்சேரி, மேலசெட்டிச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான சம்பாநெல்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்அந்தப் பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
ஏக்கருக்கு சுமார் 25ஆயிரம் வரை செலவிட்டு நடவுப் பணிகளை மேற்கொண்டு 20 நாட்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் அழுகி இருப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்பகுதியில் போதிய அளவுக்கு வடிகால் வசதியில்லாததால் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா, நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளது.
பருவமழை நீடித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டு. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என கருவேலங்கடை பகுதி விவசாயிகள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.