ஆமைக்கறி சாப்பிட்டேன், ஊமைக்கறி சாப்பிட்டேன் என்பதெல்லாம் சுத்த பொய்- சீமான் மீது வைகோ கடும் தாக்கு    

ஆமைக்கறி சாப்பிட்டேன், ஊமைக்கறி சாப்பிட்டேன் என சீமான் பேசுவது அத்தனையும் பொய் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  

ஆமைக்கறி சாப்பிட்டேன், ஊமைக்கறி சாப்பிட்டேன் என்பதெல்லாம் சுத்த பொய்- சீமான் மீது வைகோ கடும் தாக்கு      

கடந்த 10ஆம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்ட போது தீக்குளித்து உயிர் மாய்த்த உதயன், தண்டபாணி உள்ளிட்ட ஐவருக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ, சீமான் பிரபாகரனை சந்தித்தது 2 நிமிடங்கள் கூட கிடையாது. சீமான் பிரபாகரனுடன் புகைப்படம் எடுக்க கேட்டபோது புகைப்படம் எடுக்க பிரபாகரன் மறுத்துவிட்டார், விரும்பவில்லை. விடுதலை புலிகள் குறித்தும் பிரபாகரன் பற்றியும் சீமான் பேசிவருவது அத்தனையும் பொய் என பேசிய வைகோ, ஆமைக்கறி சாப்பிட்டேன், ஊமைக்கறி சாப்பிட்டேன், மாட்டுகறி சாப்பிட்டேன், ஆட்டுகறி சாப்பிட்டேன் என அவர் பேசுவதெல்லாம் சுத்த பொய்.

விடுதலை புலிகள் மற்றும் பிரபாகரனை பற்றி எல்லா இடங்களிலும் பொய்யான தகவல்களை பேசி ஒன்றும் அறியாத இளைஞர்களை தன் கட்சிக்குள் கொண்டுவரும் சதி வேலையை சீமான் செய்து வருகிறார், இதனால் விடுதலை புலிகள் நாம் தமிழர் கட்சி சீமான் மீது கடும் கோபத்தில் உள்ளனர் என வைகோ சீமானை கடுமையாக சாடியுள்ளார்.