"டாக்டர் பட்டத்தை பெரியவர் சங்கரய்யா இடக்கையால் புறக்கணிக்க வேண்டும்" வைரமுத்து!

"டாக்டர் பட்டத்தை பெரியவர் சங்கரய்யா இடக்கையால் புறக்கணிக்க வேண்டும்" வைரமுத்து!

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் மறுக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது x தல பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி அளிக்க மறுத்து வருகிறார். இதையடுத்து தமிழ்நாடு அரசுக்கும் , ஆளுநர் ரவிக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை, அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்

இந்நிலையில், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் மறுக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது x தல பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது. இந்தத் தப்புத் தாமதத்திற்குப் பிறகு ஒப்புதல் தந்தாலும் பெரியவர் சங்கரய்யா அதை இடக்கையால் புறக்கணிக்க வேண்டும். பெயருக்கு முன்னால் அணிந்து கொள்ள முடியாத மதிப்புறு முனைவர் பட்டத்தை விடத் தீயைத் தாண்டி வந்தவரின் தியாகம் பெரிது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "கொள்கை பேசிப் பேசிச் சிவந்த வாய் அவருடையது. இனி இந்த வாடிப்போன வெற்றிலையாலா வாய்சிவக்கப் போகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.