பரனூர் சுங்கச்சாவடியில் அலைமோதும் கூட்டம்... 

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அலைமோதும் மக்கள் கூட்டம் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி.

பரனூர் சுங்கச்சாவடியில் அலைமோதும் கூட்டம்... 

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு சார்பில் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகளிலும், வாகனங்களிலும் படையெடுக்க தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் பயணிகள் அதிக அளவு குவிந்தனர்.

சுங்கச்சாவடியில் பயணிகளின் வசதிக்காக பேருந்து கூடம், கழிப்பறை வசதி உள்ளிட்டவை செய்து தராததால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். தற்போது பரனூர் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் மழை பெய்ததால் பயணிகள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் ஆங்காங்கே சிதறி ஓடினர் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.