ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது போலீசை கன்னத்தில் அறைந்த பெண்!!!!

ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது போலீசை கன்னத்தில் அறைந்த  பெண்!!!!

மேல்மலையனூர் அடுத்த செக்கடிக்குப்பம் ஊராட்சி உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம்- போலீசாரை தாக்கிய பெண்மணி பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த செக்கடிகுப்பம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை  ஆக்கிரமிப்பு செய்திருந்த வீடுகள், பயிர், உலர்களம் முற்றிலும் அகற்றம் இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.வீட்டு முன் மயக்க நிலையில் இருந்துவரை அங்கிருந்த பெண் காவலர் கைப்பிடித்து எழுப்பிய போது ஆத்திரம் அடைந்த பெண்மணி பெண் காவலரை முகத்தில் பளார் என்று அறைந்தார்  அதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

வீடுகளை இடித்துக் கொண்டு வருகின்ற பொழுது
அங்கு இருந்த அம்மன் கோவில் சுற்று சுவர் அகற்றுவதற்கு முன்னதாக வட்டாட்சியர் அலெக்ஸ்சாண்டர் கற்பூரம் ஏற்றி  எலுமிச்சம்பழம் சுற்றி போட்டு அம்மனை வேண்டிய பின் jcb இயந்திரத்தை அனுமதித்து அகற்றப்பட்டது.

மேல்மலையனூர் வட்டாட்சியர் காவல்துறை  தீயணைப்புத்துறை மற்றும் ஆரம்ப சுகாதாரத்துறை அதிகாரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.