அழுகிய நிலையில் பெண் சடலம்... காணாமல் போன கணவர்... கொலை செய்துவிட்டு தப்பினாரா..?

கோவையில் வீட்டிற்குள் அரை நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் பெண் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழுகிய நிலையில் பெண் சடலம்... காணாமல் போன கணவர்... கொலை செய்துவிட்டு தப்பினாரா..?

பாண்டிராஜன் என்பவர் கடந்த 1 வருடமாக மனைவி மல்லிகாவுடன் கோவை தொண்டாமுத்தூர், வ.உ.சி. தெருவில் கடந்த ஒரு வருடமாக ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர்கள். பாண்டிராஜனும், மல்லிகாவும் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தனர். ஓட்டல் முதலாளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த சில நாட்களாக ஓட்டல் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பாண்டிராஜன், மல்லிகா வேலையில்லாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வீட்டின் உரிமையாளரின் மனைவி தண்ணீர் வருகிறது என்று சொல்வதற்காக பாண்டிராஜன் வீட்டில் சொல்வதற்காக சென்றபோது, உள் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அவர் வீட்டிக் கதவை திறந்து பார்த்தபோது கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்படாமல் திறந்தே இருந்தது. 
உள்ளே சென்று பார்த்த பொழுது மல்லிகா உடல் அழுகிய நிலையில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.  உடனே தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, பேரூர் காவல் நிலைய உதவி கண்காணிப்பாளர் திருமால் மற்றும் தொண்டாமுத்தூ காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

விசாரணையில் பாண்டிராஜன் 4 நாட்களுக்கு மேலாக வீட்டிற்கு வரவில்லை என்று தெரியவந்துள்ளது. பாண்ராஜன் மல்லிகாவை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றாரா? இல்லை கணவர் இல்லாத நேரத்தில் வேறு யாராவது மல்லிகாவை கற்பழித்து கொலை செய்தார்களா என்று பல்வேறு கோணாத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரை நிர்வாணத்தில் பெண் பிணமாக கிடந்தது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.