தமிழகத்தில் மேலும் 6 சுங்கச்சாவடிகளா..? மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...

தமிழகத்தில் மேலும் சுங்கச்சாவடிகள் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மேலும் 6 சுங்கச்சாவடிகளா..? மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...

தமிழகத்தில் புதிதாக 6 சுங்கச்சாவடிகளைத் திறக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் மேலும் 3 நெடுஞ்சாலைகளில் புதிதாக 6 சுங்கச்சாவடிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்கவிருப்பதாக வெளியான செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில்  ஏற்கனவே இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், புதிய சுங்கச்சாவடிகளை அமைப்பது தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும், இதனை ஏற்க முடியாது எனவும், அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.