இந்தியாவில் முதன்முறையாக இரு மாநிலங்களிடையே மெட்ரோ ரயில் சேவை...!

இந்தியாவில் முதன்முறையாக இரு மாநிலங்களிடையே மெட்ரோ ரயில் சேவை...!

இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு- கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஒசூர் 20.5 கிமீ தொலைவில் உள்ளது.

அதாவது,  11.7 கிமீ கர்நாடகா மாநிலத்திலும், மீதமுள்ள 8.8 கிமீ தமிழ்நாட்டிலும் உள்ளது.

எனவே ஓசூர் -  பொம்மசந்திரா இடையே போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த  இரண்டு இடங்களையும் இணைக்கும்பொது மாநிலங்கள் போக்குவரத்து அமைப்புக்கான திட்டச் செலவை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க   |  உலக பல்கலை. விளையாட்டுப் போட்டி : இந்தியாவிற்கு மேலும் 4 தங்கம்...!