கல்கத்தாவில் நடந்த பிரம்மாண்ட தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணம்; வைரலாகும் போட்டோக்கள்:

கல்கத்தாவில் தன்பால் ஈர்ப்பாளர்கள் இருவர், குடும்ப சம்மதத்தோடு, மில பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கல்கத்தாவில் நடந்த பிரம்மாண்ட தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணம்; வைரலாகும் போட்டோக்கள்:

இந்தியாவில், LGBTQIA+ சமூகம் அவ்வளவு பெரிதாக ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. ஆனால், தற்போது நடந்த ஒரு பிரம்மாண்ட திருமணம் மூலம், இந்த சமூகத்தினருக்கு இரு கரம் நீட்டி வருகை தந்திருக்கிறது கொல்கத்தா.

ஜூலை 3ம் தேதி, கொல்கத்தாவைச் சேர்ந்த அபிஷேக் ரே, பிரபல ஆடை வடிவமைப்பாளர். அவரது காதலரான மார்வாடி சமூகத்தைச் சேர்ந்த சைத்தனியா ஷர்மா என்பவரை குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களின் நல்வாழ்த்துகளோடு, மிக பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து கொண்டார். மேற்கு வங்க மணமகனான அபிஷேக் ரே, குர்த்தாவும் வேஷ்டியும் அணிந்திருந்தார். மேலும், மார்வாடி மணமகனான சைத்தனியா ஷேர்வாணி அணிந்திருந்தார்.

ஆடை வடிவமைப்பாளர் அபிஷேக்கின் காதல் கணவர் சைத்தனியா குருகிராமில் டிஜிட்டல் மார்க்கெட்டராக பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய முறையில், வடக்கிந்திய திருமணங்களில் நடக்கும் அனைத்து சடங்குகளும் இவர்களது திருமணத்திலும் நடந்தது. மஞ்சள் பூசுவது தொடங்கி, மெகந்தி, மாலை மாற்றுவது வரை திருமணம் ஏகபோகமாக நடந்தது.


இவர்களது இந்த நெகிழ்ச்சியூட்டும் திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களும் வீடியோக்களையும், போட்டோகிராபர் குழுமம், தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் ரீலாக இவர்களது திருமண வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்ற இந்த ரீல், அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும், அவர்களுக்கு இணையவாசிகள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரீத்து வருகின்றனர்.