மூன்றடி உயர ஒலிம்பிக் வீரருடன் இந்தோனேஷிய பெண் திருமணம்...சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ...!

கேரளாவில் மூன்றடி உயரம் கொண்ட ஒலிம்பிக் வீரர், இந்தோனேஷிய பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

மூன்றடி உயர ஒலிம்பிக் வீரருடன் இந்தோனேஷிய பெண் திருமணம்...சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ...!

கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டம் மேலாற்றூரைச் சேர்ந்த சேதுமாதவன், கீதா தம்பதியின் மகன் ஆகாஷ் மாதவன். இவர் 3 அடி உயரம் கொண்டவர். கடந்த 2013 ம் ஆண்டு அமெரிக்காவில் நடைப்பெற்ற  பாராலிம்பிக்  ஷாட் பூட் போட்டியில் வெள்ளி பதக்கமும், வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார். மேலும் 2017 ஆம் ஆண்டு கனடாவில் நடந்த பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். 

ஆகாஷ் மாதவன் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த தேவி சித் சௌந்தர்யா என்ற பெண்ணுக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள ஒரு கட்டிட நிறுவனத்தில் கணக்கராக தேவி சித் சௌந்தர்யா பணிபுரிந்து வந்துள்ளார். ஐந்து வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், தற்போது இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் மலப்புறம் திருமந்தம் கீழாற்றூர் குன்று பகவதி கோவில் திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களது திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.