தனக்கு தானே தாலிக்கட்டி கொண்டு திருமணம் செய்தார் ஷாமா பிந்து...!

தனக்கு தானே தாலிக்கட்டி கொண்டு திருமணம் செய்தார் ஷாமா பிந்து...!

குஜராத்தில் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்த இளம்பெண் ஷாமா பிந்து தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்தார்.

குஜராத்தின் பரோடா பகுதியை சேர்ந்த 24 வயதான ஷாமா பிந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு விநோத அறிவிப்பை வெளியிட்டார்.

இதனையடுத்து  இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் திட்டமிட்ட தேதிக்கு 3 நாட்கள் முன்னதாகவே ஷாமா பிந்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் வட இந்திய திருமணத்தில் நடைபெறும் மெஹந்தி, மஞ்சள் பூசும் விழா என எல்லாம் முறைப்படி நடந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.