மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி..

இங்கிலாந்தின் பிளைமவுத் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி..

இங்கிலாந்தின் பிளைமவுத் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் 3 பெண்கள் 3 ஆண்கள் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து தெரியவில்லை எனவும் போலீசார் கூறுகின்றனர்.

உயிரிழந்த 6 பேரில் துப்பாக்கி சூடு நடத்திய நபரும் ஒருவர் என போலீசார் தெரிவிக்கின்றனர். இது தீவிரவாத செயலாக தோன்றவில்லை என கூறும் போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.