கனமழையால் பாதிக்கப்பட்ட பிரேசில்... மீட்பு பணிகள் துரிதம்!!!

கனமழையால் பாதிக்கப்பட்ட பிரேசில்... மீட்பு பணிகள் துரிதம்!!!

பிரேசிலில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.  கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.  கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:   தோல்வியை ஒத்துக்கொண்ட காங்கிரஸ் ... சர்வதிகார ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு!!