அனைத்து உடைமைகளையும் விற்று கேரேஜில் தூங்கும் எலோன் மஸ்க்!!!!!

அனைத்து உடைமைகளையும் விற்று கேரேஜில் தூங்கும் எலோன் மஸ்க்!!!!!

ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான  எலோன் இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனக்கு "சொந்த வீடு கூட இல்லை" என்றும் "நண்பர்களின் இடங்களில்" தங்கியிருப்பதாகவும் கூறியிருந்தார்.  2020 ஆம் ஆண்டில், அவர் தனது அனைத்து சொத்துக்களையும் விற்கும் எண்ணத்தை வெளிப்படுத்திய பின்னர் இந்த செய்தி வெளிவந்தது. 

"நான் கிட்டத்தட்ட அனைத்து உடைமைகளையும் விற்கிறேன். சொந்தமாக வீடு எதுவும் இல்லை,  உடைமைகள் நம்மை பின்னுக்கு தள்ளிவிடும்" என்று ட்விட்டரில் எலோன் மஸ்க் கூறியிருந்தார்.

எலோன் மஸ்க்கின் முதன்மையான குடியிருப்பு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடமிருந்து 40,00000 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு வாங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். 

எலோன் மஸ்க்கின் தாயார் மேய் மஸ்க், சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள தனது கோடீஸ்வர மகனைப் பார்க்கச் சென்றபோது நடந்த உரையாடல்கள் குறித்து பேசியுள்ளார். மாடல் மற்றும் சமூக ஆர்வலரான மேய் மஸ்க்,  டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் முதன்மை நிர்வாக அதிகாரி உடனான தனது பிணைப்பு குறித்தும் பேசியுள்ளார்.

அவரது மகன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தாலும், எலோன் உடைமைகளில் ஆர்வம் காட்டவில்லை என மேயே கூறியுள்ளார்.   ஸ்பேக்ஸ் எக்ஸ் தலைமையகத்தில் எலோனை சந்திக்கும் போது, ​​அவர் "கேரேஜில் தூங்க வேண்டும்" என்று கூறினார் என தெரிவித்துள்ளார். 

"ராக்கெட் தளத்திற்கு அருகில் நீங்கள் ஒரு ஆடம்பரமான வீட்டை வைத்திருக்க முடியாது" என்று மேய் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

இதற்கிடையில், நேர்காணலின் போது, ​​​​மேய் தனது மகனைப் போலல்லாமல், செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதில் தனக்கு விருப்பமில்லை என்று பகிர்ந்து கொண்டுள்ளார். "ஆறு மாதங்கள் அதற்காக பயிற்சி பெற வேண்டும் எனவும் அதற்காக நம்மை நாமே தனிமைப்படுத்த வேண்டும் அதனால் அது என்னை ஈர்க்கவில்லை," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் "ஆனால் என் குழந்தைகள் நான் அதை செய்ய விரும்பினால், நான் அதை செய்வேன்," என்றும் கூறியுள்ளார். 

எலோன், கிம்பல் மற்றும் டோஸ்கா ஆகிய மூன்று குழந்தைகளை மேயே தனது முன்னாள் கணவர் எரோல் மஸ்க் உடன் பகிர்ந்து கொள்கிறார்.