தனது வளர்ப்பு மகளுடன் இரண்டாம் குழந்தையை வரவேற்கத் தயாராகும் இலான் மஸ்கின் தந்தை:

இலான் மஸ்கின் தந்தை, தனது வளர்ப்பு மகளுடன், இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராகியுள்ளார். மேலும், இது குறித்து பேசிய போது, ஜனத்தொகையை அதிகரிக்கத் தானே நாம் இங்கு இருக்கிறோம் என கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்ப்யுள்ளது!

தனது வளர்ப்பு மகளுடன் இரண்டாம் குழந்தையை வரவேற்கத் தயாராகும் இலான் மஸ்கின் தந்தை:

உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் இலான் மஸ்க், பல வகையான புதுமைகளில் ஈடுபட்டு வருவதோடு, சர்ச்சைகளுக்கே பேர் போனவராக இருக்கிறார் அவர். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இலான் மஸ்க், தற்போது, மேலும் சில நிருவனங்களை வாங்க முயற்சி செய்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்த நிலையில், அவரது தந்தை தற்போது ஒரு பெரும் அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறார். இந்த செய்தியால் அனைவரும் திடுக்கிட்டு போயுள்ளனர்.

76 வயதான இரால் மஸ்க், தென்னாப்ரிக்காவில் பொறியியலாளராக இருக்கிறார். தனது வளர்ப்பு மகளான ஜனா பெசூடென்ஹவுட் என்பவருடன் ரகசியமாக, கடந்த 2019ம் ஆண்டே ஒரு குழந்தைப் பெற்றதாகவும், தற்போது இரண்டாவது குழந்தையை வரவேற்றதாகவும் தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். 35 வயதே ஆன ஜானா, இரால் மஸ்கின் இரண்டாவது மனைவியான ஹேய்டே பெசூடென்ஹவுட்-டின் மகளாவார். இரால் ஹெய்டேவைத் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவர்கள் இருவருக்கும் எலியட் ரஷ் என்ற ஐந்து வயது மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனது இரண்டாவது ரகசிய குழந்தைக் குறித்து இலான் மஸ்க் பத்திரிக்கையாளர்களிடம் கூறிய போது, “இந்த உலகில் நாம் ஜனத்தொகையை அதிகரிக்கத் தானே பிறந்திருக்கிறோம்” என கூறியிருக்கிறார். தனது வளர்ப்பு மகளுடனே இப்படி குழந்தைப் பெற்றுக் கொண்ட, அதுவும் இரண்டாவது குழந்தைப் பெற்ற இரால், பலராலும் வசைக்கப்பட்டு வருகிறார். மேலும், பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் இரால், தனக்குப் பிடித்தது போல வாழ யாரது அனுமதியும் வேண்டாம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.