இலங்கைக்கு 3.3 டன் கிலோ மருத்துவப் பொருட்களை வழங்கிய இந்தியா!!

இலங்கைக்கு 3.3 டன் கிலோ மருத்துவப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது.

இலங்கைக்கு 3.3 டன் கிலோ மருத்துவப் பொருட்களை வழங்கிய இந்தியா!!

கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியா வழங்கிய 58 கோடி ரூபாய் நிதியில் இலங்கையில் சுவா செரியா ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இத்துடன் இந்தியா இலவசமாக ஆம்புலன்ஸ் வாகனங்களையும் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச்சில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றபோது மருந்துகள் பற்றாக்குறை குறித்து சுவா செரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அதற்கு ஆவன செய்வதாக அமைச்சர் உறுதி அளித்திருந்த நிலையில் அதன்படி 3 ஆயிரத்து 300 கிலோ மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.