நாட்டியப்பள்ளி ஆசிரியைக்கு சா்வதேச விருது!

நாட்டியப்பள்ளி ஆசிரியைக்கு சா்வதேச விருது!

மயிலாடுதுறையைச் சேர்ந்த நாட்டியப் பள்ளி ஆசிரியைக்கு பாங்காக்கில் இன்று மாலை நடைபெற்ற சர்வதேச பள்ளி விருது விழாவில், சிறந்த பயிற்றுநருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில், உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள சிறந்த பள்ளி, சிறந்த பயிற்றுநா்களுக்கு விருது வழங்கப்படும். 

வழக்கம் போல், இந்த ஆண்டுக்கான விழா, இன்று நடைபெற்ற நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகள், கல்வியாளர்கள், பயிற்றுநர்கள் இதில் விருது பெற்றுள்ளனர்.இவர்களில் தமிழ்நாட்டில் இருந்து,  மயிலாடுதுறையில் அபிநயா நாட்டியப்பள்ளி நடத்தி வரும் அப்பள்ளியின் குரு உமாமகேஸ்வரிக்கு சிறந்த பயிற்றுநராக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.  

இந்த விருதினை அந்நாட்டின் மத்திய முன்னாள் அமைச்சர் சுரேஷ்பிரபு, சின்னத்திரை நடிகர் அபிஜித் சாவந்த் ஆகியோர் வழங்கினர்.

இதையும் படிக்க || விலைவாசி உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சாா்பில் ஆர்ப்பாட்டம்!!