உக்ரைன் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து உடல்களில் முத்திரை குத்தும் ரஷிய வீரர்கள்...! குற்றம்சாட்டிய பெண் எம்.பி!!

ரஷ்ய வீரர்கள் உக்ரைன் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களின் உடல்களில் முத்திரை குத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.

உக்ரைன் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து உடல்களில் முத்திரை குத்தும் ரஷிய வீரர்கள்...! குற்றம்சாட்டிய பெண் எம்.பி!!

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ந் தேதி தொடங்கிய தனது தாக்குதலை ரஷியா இன்றளவும் கைவிடவில்லை. வான்வெளி, தரைவழி கடல்வழி என பலமுனைகளில் தனது தாக்குதலை உக்கிரமாக நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களை கைப்பற்ற ரஷியா கடுமையாக போராடி வருகிறது. அதே சமயம் உக்ரைன் படை வீரர்களும் ரஷ்ய வீரர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என எதிர்த்து சண்டையிடுகின்றனர். இதனால் ரஷியா படைகளும் திணறி வருகிறது. 

இருப்பினும் கீவ் புறநகர் பகுதியான புச்சா நகரை ரஷியா படைகள் கைப்பற்றினார்கள். இதனையடுத்து கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதியில் ஆதிக்கம் செலுத்த ரஷியா முழு கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் பெண் எம்.பி. லெசியா வாசிலென்க், தனது டுவிட்டர் பக்கத்தில், ரஷிய வீரர்கள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும், பெண்களின் உடலில்  முத்திரை குத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ரஷிய வீரர்கள்  உக்ரைன் மக்களை கொள்ளையடித்து, கற்பழித்து, கொன்று வருகின்றனர். ரஷியாவை "ஒழுக்கமற்ற குற்றங்களின் தேசம்" என்றும், ”ஒழுக்கக்கேடான குற்றவாளிகளின் தேசம் அது” என்றும் லெசியா வாசிலென்க் கூறி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து "பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் சித்திரவதை செய்யப்பட்ட உடல்" என்று அவர்  ஒரு புகைப்படத்தையும்  வெளியிட்டு உள்ளார். நான் மவுனமாக  இருக்கிறேன். என் மனம் கோபத்தாலும் பயத்தாலும் வெறுப்பாலும் செயலிழந்துவிட்டது என அந்த பதிவில் கூறி உள்ளார்.