கனடா சிறுமி எழுதிய "தி கிரேட் லயன் " புத்தகம் வெளியீடு
கனடாவை சேர்ந்த 7 வயது சிறுமி எழுதிய ‘த கிரேட் லயன்’ புத்தகம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
தவழும் பருவத்தை கடந்து, குழந்தைகள் எழுதப் படிக்க தொடங்கும் 3 வயதில், கிரைய்சிஸ் நைட் என்ற சிறுமி ‘த கிரேட் லயன்’ என்ற கதைப்புத்தகத்தை எழுத தொடங்கியுள்ளார்.
சுமார் 4 ஆண்டுகளாக சிறுமி உருவாக்கிய அந்த கலைப்படைப்பில், சிங்கம் மற்றும் இரு குழந்தைகள் கதாப்பாத்திரங்களாக இடம்பெற்றுள்ளனர்.
கற்பனை திறனுடன் நட்பு, விலங்குகள் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கி சிறுமி எழுதியுள்ள இந்த புத்தகமானது வெளிநாடுகளில் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், இந்தியாவில் ‘பஃபின்’ என்ற பெயரில் அச்சிடப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது.
சிறுமியின் கலைப்படைப்பை பாராட்டி வரும் பலரும், அவர் ஒரு வயதிலேயே எழுத படிக்க கற்றுக்கொண்டதை கேட்டு ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.