துருக்கி செல்ல வேண்டாம் - நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

துருக்கி  செல்ல வேண்டாம் என இஸ்ரேல் மக்களுக்கு அந்நாட்டு  அரசு எச்சரித்துள்ளது.

துருக்கி செல்ல வேண்டாம் - நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையின் மூத்த அதிகாரியாக இருந்த ஹசன் சையத், கடந்த ஞாயிற்று கிழமை தெஹ்ரானில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஈரான்,  ஹசன் படுகொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும், அதற்கு பழித்தீர்க்கப்படும் என கூறியுள்ளது.

இந்தநிலையில் துருக்கி நாட்டிற்கு சுற்றுலா செல்லும் இஸ்ரேல் மக்கள் மீது ஈரான் தாக்க கூடும் என்பதால், பயணத்தை ரத்து செய்யும்படி குடிமக்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத ஒழிப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேல் மக்களை குறிவைத்து  ஈரான் தாக்குதல் நடத்த கூடிய நிலை உள்ளதால், பாதுகாப்பு விசயங்களில் கவனமாக இருக்க கேட்டுக்கொண்டுள்ளது.