சிங்கத்தை  அசால்டா அல்லேக்காக தூக்கி சென்ற சிங்க பெண்!    

பெண் ஒருவர் கையில் அசால்டாக சிங்கத்தை தூக்கி செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது

சிங்கத்தை  அசால்டா அல்லேக்காக தூக்கி சென்ற சிங்க பெண்!    

பெண் ஒருவர் கையில் அசால்டாக சிங்கத்தை தூக்கி செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

குவைத் நகரின் சபாஹியா பகுதியில் உள்ள தெருவில் சிங்கம் தப்பி ஓடி உள்ளதாக அரபு ஊடகம் தெரிவித்தது. இந்த வீடியோ காட்சி குவைத் நகரத்தில் பதிவு செய்யப்பட்டது.தனியார் குடியிருப்பில் இருந்து சிங்கம் தப்பித்து, பிறகு சாலையில் நடந்து வந்துள்ளது.  

இவ்வாறு சாலையில் வலம் வந்த சிங்கத்தை ஒரு பெண் அல்லேக்காக தூக்கிக்கொண்டு வரும் காட்சி பார்ப்போரை திகிலில் ஆழ்த்தியுள்ளது. சிங்கம் தனது பாதங்களை ஆத்திரத்தில் இந்த பெண் மீது வைக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளது .சில தூரம் நடந்து சென்று, சிங்கத்தை அந்த பெண் விடுவித்துள்ளார்,ஆனால் அந்த பெண் அவரிடமே அமர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.