3 வாரமாக லாரி டிரைவர்கள் போராட்டம்... உடனடியாக கைவிட வேண்டும் என போலீசார் எச்சரிக்கை!! கனடாவில் என்ன தான் நடக்கிறது??

கனடாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி ஓட்டுனர்கள் உடனடியாக போராட்டக்களத்தை விட்டு வெளியேற வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

3 வாரமாக லாரி டிரைவர்கள் போராட்டம்...  உடனடியாக கைவிட வேண்டும் என போலீசார்  எச்சரிக்கை!!  கனடாவில் என்ன தான் நடக்கிறது??

கனடாவில் இருந்து அமொக்காவிற்கும், அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கும் வரும் லாரி ஓட்டுனர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுனர்கள் கடந்த 3 வாரமாக கனடா தலைநகர் ஒட்டவாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக ஒட்டவா காவல்துறை தலைவரை அப்பொறுப்பில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ நீக்கினார்.

ஓட்டுனர்களின் போராட்டத்தால் கனடாவின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் போராட்டக்களத்தை விட்டு போராட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் ஒட்டவா காவல்துறை அறிவித்துள்ளது.