இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து காரில் இருந்து கீழே தள்ளி விட்ட உபர் ஓட்டுநர் கைது!!..

அமெரிக்காவில் தூங்கிய இளம்பெண்ணை  உபர் ஓட்டுநர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து காரில் இருந்து கீழே தள்ளி விட்ட உபர் ஓட்டுநர் கைது!!..

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி 20 வயது மதிக்க தக்க இளம்பெண் ஒருவர் உபர் காரில் பயணம் செய்துள்ளார். அந்த காரை 30 வயதான  தாவித் மெகோனோன் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த பயணத்தின்போது உபர் காரின் ஓட்டுநர் அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக 18-ஆம் தேதி அந்தப் பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து அந்த பெண் அளித்துள்ள புகாரில், கடந்த 16-ஆம் தேதி இரவு நான் ஒரு உபர் காரில் பயணம் செய்தேன். நான் அந்த காரில் ஏறிய உடன் தூங்கிவிட்டேன். பின்பு சில நேரத்திற்கு பிறகு என்னை யாரோ தொடுவதுபோல் உணர்வு ஏற்பட்டது. அப்போது நான் கண் விழித்து பார்த்தபோது என்னுடைய ஆடைகள் அனைத்தும் கலைந்து இருந்தன. 

அத்துடன் காரின் ஓட்டுநர் என்னை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். நான் அவரை தடுக்க முயன்றேன். ஆனால் என்னை அவர் தட்டிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்தார். அதன்பின்னர் என்னுடைய இறங்கும் இடத்தில் என்னை தள்ளிவிட்டு ஆடைகளையும் வெளியே தூக்கி எறிந்துவிட்டு சென்றார் எனக் கூறியுள்ளார். அந்தப் பெண் அளித்த புகார் மற்றும் உபர் பதிவு விவரங்களை வைத்து காவல்துறையினர் தாவித் மெகோனோனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.