”எல் நினோ காலநிலை -  உயிர்க் கொல்லி நோய்கள் உருவாகும்”:  உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை!

”எல் நினோ காலநிலை -  உயிர்க் கொல்லி நோய்கள் உருவாகும்”:  உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை!

எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றம் காரணமாக மீண்டும் உயிர்க் கொல்லி நோய்கள் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

எல் நினோ என்றால் கால நிலை நிகழ்வு ஆகும். இது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில், கடல் மேற்பரப்பு வெப்பமயமாதலுடன் தொடர்புடைய காலநிலை மாற்றமாகும்.

எல்-நினோ காலத்தில் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால், கடுமையான வறட்சி ஏற்படும். குறைந்த நேரத்தில் அதீத மழை, திடீர் புயல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.  

இதன் காரணமாக மீண்டும் கொரோனா போன்ற உயிர்க் கொல்லி நோய்கள் உருவாகும் என்றும், இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படுமெனவும் உலக சுகாதர அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

இதையும் படிக்க || உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நினைவு பாிசு வழங்க கூடாது!