கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் கிடைக்குமா..?  ஆலோசனை குழு அக்டோபர் 26-ம் தேதி கூடுகிறது...

கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் கிடைக்குமா?

கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் கிடைக்குமா..?  ஆலோசனை குழு அக்டோபர் 26-ம் தேதி கூடுகிறது...

கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு வரும் 26-ம் தேதி கூடுகிறது. இது தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானியும் மருத்துவருமான சவுமியா சுவாமிநாதன், கோவாக்சின் தடுப்பூசியுடன் மிக நெருக்கமாக உலக சுகாதார அமைப்பு பயணித்து வருவதாக தெரிவித்துள்ளார். அதிகமான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது தங்களது நோக்கம் என்றும், இதன் மூலம் அதிக மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கடந்த மாதம் 27-ம் தேதி கோவாக்சின் தரப்பில் அளிக்கப்பட்ட கூடுதல் தரவுகளை ஐ. நா சபையின் நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும், அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் அதில் விடைகள் இருப்பின் அடுத்த வாரம் இறுதி முடிவு கிடைக்கும் எனவும், உலக சுகாதார அமைப்பின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அவசரகால அனுமதி கிடைக்கும் என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.