இளைஞர்களுக்கு 'அக்னிபத்' குறித்த புரிதல் இல்லை - கடற்படை தளபதி விளக்கம்!!
இளைஞர்களுக்கு 'அக்னிபத்' குறித்த புரிதல் இல்லை என கடற்படை தளபதி விளக்கம் அளித்துள்ளார்.
ராணுவ வேலைவாய்ப்பு திட்டமான, 'அக்னிபத்' குறித்து தவறான புரிதல் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் அதை எதிர்த்து இளைஞர்கள் போராடுகின்றனர்,'' என, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் தெரிவித்தார்.
இது குறித்து கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் வெளியிட்டுள்ள, வீடியோவில், அக்னிபத்' ராணுவ வேலைவாய்ப்பு உருவாக்க திட்டக்குழுவில் தானும் அங்கம் வகித்ததாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த திட்டத்தை வடிவமைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், ராணுவத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் இத்திட்டத்தினால் நாடு பலன் அடையும் என்றும், இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் என்றும் கூறிய அவர்,
திட்டம் குறித்து சரியான புரிதல் இல்லாததாலும், தவறான தகவல்கள் பரப்பப்படுவதாலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். ராணுவத்தில் பணியாற்ற முன்பு ஒருவருக்கு கிடைத்த வாய்ப்பு, இத்திட்டத்தால் நான்கு பேருக்கு கிடைக்கும் எனவும் ஹரிகுமார் கூறியுள்ளார்.