சுற்றுச்சூழல் அமைச்சர் மீது சரமாரி கத்தி குத்து…எந்த நாட்டில் தெரியுமா?

சுற்றுச்சூழல் அமைச்சர் மீது சரமாரி கத்தி குத்து…எந்த நாட்டில் தெரியுமா?

மாலத்தீவின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அலி சோலே வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரை வழிமறித்த ஒருவர் கத்தியால் தாக்க முற்பட்டார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட அமைச்சர் தன்னுடைய கைகளை வைத்து தாக்குதலை தடுக்க முயன்றார். இருந்தபோதும் அவருடைய கழுத்து மற்றும் முகத்தில் குத்தி, அவருக்கு கத்திகுத்து விழுந்தது.

வாகனத்தை விட்டுவிட்டு அமைச்சர் தப்பியோடினார். தாக்குதல் நடத்தியவரை பொதுமக்கள் பிடிக்க வந்தபோது அவர்களையும் கத்தியால் தாக்க முயற்சித்தால் பதற்றம் ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த மாலத்தீவு காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து மாலே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அலி சோலேவுக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.