குடிபோதை தகராறில் லோடுமேன் அடித்து கொலை!!! டிரைவருக்கு வலைவீச்சு!!!
குடிபோதையில், தகராறு நடந்துள்ளது. அதில், டிரைவர் லோடுமேனைக் கொலை செய்து தப்பியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி பாரதி நகரை சேர்ந்தவர் குமார்(52). இவர் கிண்டி பகுதியில் லாரிகளில் லோடுமெனாக வேலை பார்த்து வந்தார். குமார் தனது லாரி டிரைவர் செந்தில் என்பவருடன் கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் மது அருந்தி கொண்டு இருந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த செந்தில் அங்கிருந்த இரும்பு ராடால் குமார் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் குமார் மயங்கி விழுந்தார். இதை கண்ட செந்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
அப்போது அங்கிருந்தவர்கள் கிண்டி போலீசாருக்கு தகவல் தந்தனர். கிண்டி போலீசார் 108 அம்புலன்சுடன் வந்து பார்த்த போது குமார் இறந்து கிடந்தார். குமார் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஒடிய செந்திலை தேடி வருகின்றனர். செந்திலை பிடித்த பின்னர் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.