2014-ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கங்கனா மீது புகார்

இந்தியாவுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது என பேசிய பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக ஆம் ஆத்மி தேசிய செயல் தலைவர் பிரீத்தி மேனன் மும்பை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

2014-ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கங்கனா மீது புகார்

ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரணாவத், பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 பா.ஜ.க எம். பி வருண் காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தற்போது 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது..