மியான்மரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு.....

மியான்மரில் அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

மியான்மரில் நிலநடுக்கம்-  ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு.....
மியான்மர் நாட்டில் இந்திய எல்லை அருகே அமைந்த பகுதியில் அதிகாலை 12.54 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 
 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஐந்து 5.0 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் 82 கி. மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.