குதுகலமாக அந்தரத்தில் தொங்கியபடி 72 வயது பாட்டியின் சாகசம்!!
ரோப்கார் வகை சாகசத்தில் ஈடுபட்ட 72 வயதான பாட்டி....
துளியும் பயமில்லாமல் ரோப்கார் வகை சாகசத்தில் ஈடுபட்ட 72 வயதான பாட்டியின் தைரியம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் வின்ச் என்று அழைக்கப்படும் ரோப்கார் வகை சாகசம் ஒன்று உள்ளது. அதில் சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிறு நடுக்கத்தோடு தான் பயணம் செய்வர்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 72 வயதுமிக்க பாட்டி ஒருவர் அந்த பூங்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்த வின்ச்சில் பயணம் செய்ய ஆசைப்பட்ட அந்த பாட்டியின் தைரியத்தை அனைவரும் பாராட்டி வந்தனர்.
View this post on Instagram
பின்னர் சேலை அணிந்திருந்த அவர் சீட்பெல்ட் மற்றும் இருக்கையுடன் இறுக்கி பிடித்துக்கொள்ளும் பாதுகாப்பு பெல்ட்களை அணிந்த பின் துளியும் பயமில்லாமல் தைரியமாக அந்தரத்தில் சாகசம் மேற்கொண்டார். சாதனைக்கு வயதில்லை என்பதை உணர்த்தும் வகையில் பாட்டியின் தைரியம் காண்போரை வியப்படைய செய்தது.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் பயப்படவில்லை...இதை மிகவும் விரும்பினேன்...இது குதுகலமாக இருந்தது” என்று பாட்டி தெரிவித்தார்.
இந்த வீடியோ காட்சியின் பதிவு ‘யாத்திரா பிரேமிகள்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவில் ‘இவருடைய பெயர் ‘பாரு அம்மா’.அவருடைய கனவுகளில் ஒன்றை நிறைவேற்ற நான் உதவினேன். பாரு அம்மாளை மாதிரி இன்னும் நிறைய பேர் வரட்டும்.’ என பதிவிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோ பல்வேறு தரப்பினரால் ரசிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.