முகக்கவசம் அணியாதவரை துப்பாக்கியால் சுட்ட வங்கி பாதுகாவலர்..!

முகக்கவசம் அணியக்கோரி ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வங்கி பாதுகாவலர், ரயில்வே ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகக்கவசம் அணியாதவரை துப்பாக்கியால் சுட்ட வங்கி பாதுகாவலர்..!

உத்திரபிரதேசம் மாநிலம், பரேலியில் ராஜேஷ் என்ற ரயில்வே ஊழியர் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு பணம் செலுத்த சென்றுள்ளார். அங்கு அவர் முகக்கவசம் அணியாமல் இருந்ததை வங்கி பாதுகாவலர் கேசவ் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வங்கி பாதுகாவலர், ரயில்வே ஊழியர் ராஜேஷின் தொடையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வங்கி பாதுகாவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.