புதிய கட்சியை தொடங்கினார் அமரீந்தர் சிங்...

காங்கிரஸிலிருந்து விலகிய பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதியக் கட்சியைத் தொடங்கினார்.

புதிய கட்சியை தொடங்கினார் அமரீந்தர் சிங்...

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பல்வேறு உட்கட்சி பிரச்னை தொடர்பாக அவர் கட்சியிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார்.

இதைதொடர்ந்து  பாஜகவில்  இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில், பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியை அமரீந்தர் தொடங்கியுள்ளார். கட்சியை பதிவு செய்வதற்கான பணிகளில் தீவிரமடைந்துள்ள அவர், எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.